சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீர் இடைத் துயின்றவன், தம்பி,
பண் - கொல்லி   (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nUrPk4HHz-Y

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.033   நீர் இடைத் துயின்றவன், தம்பி,  
பண் - கொல்லி   (திருத்தலம் திருவுசாத்தானம் (கோவிலூர்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான்,
போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ;
கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம்
சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே.

[1]
கொல்லை ஏறு உடையவன், கோவண ஆடையன்,
பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்
முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ்
தில்லையான் உறைவு இடம் திரு உசாத்தானமே.

[2]
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தம் கனா ஆக்கினான், ஒரு நொடி;
காமனார் உடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்;
சேமமா உறைவு இடம் திரு உசாத்தானமே.

[3]
மறி தரு கரத்தினான், மால்விடை ஏறியான்,
குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ,
நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய்
செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே.

[4]
பண்டு, இரைத்து அயனும் மாலும், பலபத்தர்கள்
தொண்டு இரைத்தும், மலர் தூவித் தோத்திரம் சொல,
கொண்டு இரைக் கொடியொடும் குருகினின் நல் இனம்
தெண்திரைக் கழனி சூழ் திரு உசாத்தானமே.

[7]
மடவரல் பங்கினன்; மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர,
அடர்தர ஊன்றி, அங்கே அவற்கு அருள்செய்தான்;
திடம் என உறைவு இடம் திரு உசாத்தானமே.

[8]
ஆண் அலார், பெண் அலார், அயனொடு மாலுக்கும்
காண ஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்து உளான்,
பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான், இடம்
சேண் உலாம் மாளிகைத் திரு உசாத்தானமே.

[9]
கானம் ஆர் வாழ்க்கையான், கார் அமண் தேரர் சொல்
ஊனமாக் கொண்டு, நீர் உரைமின், உய்ய எனில்
வானம் ஆர் மதில், அணி மாளிகை, வளர் பொழில்,
தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே!

[10]
வரை திரிந்து இழியும் நீர் வளவயல் புகலி மன்,
திரை திரிந்து எறிகடல்-திரு உசாத்தானரை
உரை தெரிந்து உணரும் சம்பந்தன், ஒண் தமிழ் வல்லார்
நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list