சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
3.033
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீர் இடைத் துயின்றவன், தம்பி, பண் - கொல்லி (திருவுசாத்தானம் (கோவிலூர்) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=nUrPk4HHz-Y |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3.033  
நீர் இடைத் துயின்றவன், தம்பி,
பண் - கொல்லி (திருத்தலம் திருவுசாத்தானம் (கோவிலூர்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு மந்திரபுரீசுவரர் திருவடிகள் போற்றி )
நீர் இடைத் துயின்றவன், தம்பி, நீள் சாம்புவான், போர் உடைச் சுக்கிரீவன், அனுமான், தொழ; கார் உடை நஞ்சு உண்டு, காத்து; அருள்செய்த எம் சீர் உடைச் சேடர் வாழ் திரு உசாத்தானமே. | [1] |
கொல்லை ஏறு உடையவன், கோவண ஆடையன், பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார் முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் தில்லையான் உறைவு இடம் திரு உசாத்தானமே. | [2] |
தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார் தம் கனா ஆக்கினான், ஒரு நொடி; காமனார் உடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்; சேமமா உறைவு இடம் திரு உசாத்தானமே. | [3] |
மறி தரு கரத்தினான், மால்விடை ஏறியான், குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ, நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே. | [4] |
பண்டு, இரைத்து அயனும் மாலும், பலபத்தர்கள் தொண்டு இரைத்தும், மலர் தூவித் தோத்திரம் சொல, கொண்டு இரைக் கொடியொடும் குருகினின் நல் இனம் தெண்திரைக் கழனி சூழ் திரு உசாத்தானமே. | [7] |
மடவரல் பங்கினன்; மலைதனை மதியாது சடசட எடுத்தவன் தலைபத்தும் நெரிதர, அடர்தர ஊன்றி, அங்கே அவற்கு அருள்செய்தான்; திடம் என உறைவு இடம் திரு உசாத்தானமே. | [8] |
ஆண் அலார், பெண் அலார், அயனொடு மாலுக்கும் காண ஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்து உளான், பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான், இடம் சேண் உலாம் மாளிகைத் திரு உசாத்தானமே. | [9] |
கானம் ஆர் வாழ்க்கையான், கார் அமண் தேரர் சொல் ஊனமாக் கொண்டு, நீர் உரைமின், உய்ய எனில் வானம் ஆர் மதில், அணி மாளிகை, வளர் பொழில், தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே! | [10] |
வரை திரிந்து இழியும் நீர் வளவயல் புகலி மன், திரை திரிந்து எறிகடல்-திரு உசாத்தானரை உரை தெரிந்து உணரும் சம்பந்தன், ஒண் தமிழ் வல்லார் நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே. | [11] |